கஜினிகாந்த் (Ghajinikanth), சந்தோஷ் பி. ஜெயக்குமாரின் இயக்கத்தில், கே. ஈ. ஞானவேல்ராஜாவின் தயாரிப்பில் உருவாகி வரும் தமிழ்த்திரைப்படம். இப்படம் பலே பலை மகடிவாய் என்னும் தெலுங்கு திரைப்படத்தின் கதையைத் தழுவிய தமிழ்த்திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ஆர்யா, சாயிஷா சைகல் ஆகியோர் முதன்மைப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் பல்லுவின் ஒளிப்பதிவிலும், பாலமுரளி பாலுவின் இசையிலும், பிரசன்னா ஜிகேவின் படத்தொகுப்பிலும் 2018இல் வெளியாகவுள்ள திரைப்படம்